போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் மட்டுமல்லாமல் தபால் நிலைய ஃப்ரான்சைசிஸ் உரிமையை பெற்றும் வருமானம் ஈட்டலாம். இதற்கு செய்யவேண்டிய முதலீடும் குறைவுதான். தபால் நிலையத்தின் வாயிலாக மக்கள் இப்போது பல்வேறு வசதிகளை பெறுகின்றனர். மேலும் தபால் அலுவலகங்கள் என்பது கிராமப்புற மக்களுக்கு வங்கி சேவைகளை வழங்குகிறது. அனைத்து இடங்களிலும் தபால் நிலையத்தை தொடங்க முடியாது என்பதால், தனி நபர்கள் (அ) ஒரு குழுவுக்கோ ஃப்ரான்சைசிஸ் வழங்கப்படுகிறது.

தற்போது எப்படி தபால் நிலைய ஃப்ரான்சைசிஸ் உரிமையை எடுக்கலாம் என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம். 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியிலிருந்து 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவும். பின் ப்ரான்சைசிஸ் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். அதோடு இந்திய அஞ்சல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக்கொள்ள வேண்டும். தபால் நிலைய சேவைகளுக்கு கிடைக்கும் கமிஷன் குறித்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பதிவு செய்யப்பட்ட போஸ்டுக்கு ரூ.3, ஸ்பீட் போஸ்டு செய்தால் ரூ.5, 100 முதல் 200 ரூபாய் வரையிலான மணி ஆர்டர்களுக்கு 3.50 ரூபாய், 200 ரூபாய்கு மேல் மணி ஆர்டர்களுக்கு 5 ரூபாய், பதிவு மற்றும் ஸ்பீட் போஸ்ட்டிற்கு மாதம் 1000 ரூபாய் என கமிஷன் கிடைக்கும். துறையின் (https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf) எனும் அதிகாரப்பூர்வமான தளத்தில் கிளிக் செய்யலாம். அதனை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அஞ்சல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அதன் பிறகே வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை வழங்கலாம்.