சின்னத்திரை சீரியலில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த சீரியலுக்கு பிறகு ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வந்த ஆலியா மானசா பிரசவம் காரணமாக சீரியலில் இருந்து விலகிய நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடித்து வருகிறார். நடிகை ஆலியா மானசா ராஜா ராணி தொடரில் நடித்த போது நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில், ஆலியா மானசா தன்னுடைய யூடியூப் சேனலில் கணவர் சஞ்சீவ் பற்றிய சொன்ன வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது இனியா சூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் சஞ்சீவ் ஆலியாவுக்கு ஹாய் சொல்கிறார். ஹாய் அண்ணா என்று கூற அப்படி எல்லாம் சொல்லாதீங்க என்று சஞ்சீவ் கூறுகிறார். எனக்கு இனியா சீரியலில் வேறொருவருடன் திருமணம் நடந்து விட்டது என்று ஆலியா கூறினார். எனவே நான் இனி அப்படித்தான் கூறுவேன் என்று ஆல்யா கூற சஞ்சீவ் நான் சூட்டிங் செல்கிறேன் என்று கூறிவிட்டு கிளம்புகிறார். உடனே ஆல்யா ஒன்னு வீட்டுக்கு வந்தா தூங்குறீங்க. இல்லன்னா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டா வறீங்க. இல்லன்னா கிரிக்கெட் விளையாட போறீங்க. நான் எப்போ உங்கள பார்க்கிறது என சஞ்சீவ் மீது குற்றச்சாட்டுகளை ஆல்யா அடுக்குகிறார். மேலும் இந்த வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.