தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன் நடிகராக கலக்கியவர் பொன்னம்பலம். இவர் கடந்த 3 வருடங்களாக உடல்நலக் குறைவின் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கினார். அண்மையில் நடிகர் பொன்னம்பலத்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற தற்போது நலமுடன் இருக்கிறார். இவர் அண்மையில் கொடுத்த ஒரு பேட்டியில் தன் அண்ணனே தனக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல்ல முயற்சி செய்ததாக பரபரப்பு தகவலை கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஒரு தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கடந்த 3 வருடங்களாக நான் கஷ்டப்படாத அளவுக்கு நடிகர் தனுஷ் தனக்கு உதவி செய்துள்ளதாகவும் அவருக்கு நான் என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன் என்றும் கூறினார். நடிகர் தனுஷுக்கு நன்றியும் கூறினார். தம்பி தனுஷிடம் போனில் பேசிக் கொண்டிருந்த போதே என்னுடைய வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பினார். நான் இந்த அளவுக்கு அவர் எனக்கு உதவி செய்வார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. மேலும் நான் நினைத்ததை விட எனக்கு 10 மடங்கு அதிகமாக அவர் உதவி செய்துள்ளதோடு 3 வருடங்களில் நான் கஷ்டப்படாத அளவுக்கு உதவி செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.