தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்த நிலையில், நடிகர் விஜய் ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு வாழ்த்து சொல்லவில்லை என தெலுங்கு ஊடகங்கள் விமர்சித்துள்ளது. முதன்முறையாக ஒரு தென்னிந்திய படம் ஆஸ்கார் விருது வென்றுள்ள நிலையில் நடிகர் விஜய் ஒரு டுவிட்டர் பதிவை கூட போடவில்லை. ஆர்ஆர்ஆர் படக்குழுவின் மீது நடிகர் விஜய்க்கு பொறாமை என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆர்ஆர்ஆர் படக்குழுவை ஷாருக்கான், சிரஞ்சீவி, மகேஷ்பாபு, மம்மூட்டி, சூர்யா, கார்த்தி, ரஜினி, கமல், பிரபாஸ் மற்றும் யஷ் என பல பிரபலங்கள் வாழ்த்தியுள்ளனர். ஆனால் நடிகர் விஜய் மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருப்பது அவருக்கு பொறாமையாக தான் இருக்க வேண்டும் என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த செய்தியை பார்த்த விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு போன் செய்து வாழ்த்தி இருக்கலாம். யாருக்கு தெரியும். தற்போது நடிகர் விஜய் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் ஒருவேளை வாழ்த்து சொல்லாமல் இருக்கலாம். நடிகர் விஜய்க்கு அவர்களை எல்லாம் பார்த்து பொறாமை கிடையாது என்று ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.