இந்திய மாற்றுத்திறனாளி அணியின் கேப்டன் சச்சின் சிவா. இவர் நேற்று சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மதுரைக்கு செல்வதற்காக சென்றுள்ளார். இவர் தமிழக அரசுக்கு சொந்தமான கழிவறை வசதியுடன் கூடிய எஸ்இடிசி பேருந்தில் ஏறுவதற்காக சென்றுள்ளார். அப்போது பேருந்து நடத்தினர் மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி கிடையாது பேருந்தில் ஏறக்கூடாது என கூறியுள்ளார். அதற்கு சச்சின் சிவா இந்த பேருந்தில் செல்ல மாற்று திறனாளிகளுக்கு உரிமை உண்டு எனக் கூறியுள்ளார்.

அதற்கு பேருந்து நடத்துனர் முகத்தை உடைத்து விடுவேன். எனக்கு எல்லாம் தெரியும் என கூறி மிரட்டல் விடுத்துவிட்டு அவரை பேருந்தில் ஏற்றாமல் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலான நிலையில் பலரும் பேருந்து நடத்துனருக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தற்போது பேருந்து நடத்துனரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் நாளை விசாரணை நடைபெற இருக்கிறது.