தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வரலாற்று பாணியில் உருவாகும் சூர்யா 42 படம் 10 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில் பிரபல விமர்சகர் உமர் சந்து நடிகர் சூர்யா சூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி திஷா பதானியை தன்னுடைய கேரவேனுக்குள் அழைத்து செல்வதாக ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதோடு சூர்யா நடிகை திஷாவுடன் இணைந்து நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். சூர்யா நடிகை திஷா பதானியை கவர்ச்சியாகவும் ஹாட்டாகவும் பார்க்கிறார். மதிய உணவு சாப்பிடுவதற்கு மற்றும் தேநீர் குடிப்பதற்கு போன்ற காரணங்களுக்காக திஷா பதானியை தன்னுடைய கேரவேனுக்குள் அடிக்கடி அழைத்து செல்கிறார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை பார்த்த சூர்யா ரசிகர்கள் பலரும் உமர் சந்துவை விளாசி வருகிறார்கள்.