சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் இருக்கும் நூலகத்தில் மணி அரசு என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது இளம்பெண் ஒருவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, என்னை காதலிப்பதாக கூறி மணிஅரசு அன்பாக பழகினார். இதனை நம்பி அவருடன் நெருக்கமாக பழகினேன். அதன் பலனாக நான் 2 முறை கர்ப்பமானேன்.

ஆனால் மணியின் வற்புறுத்தலின்படி 2 முறையும் கருவை கலைத்தேன். தற்போது மணி என்னை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே முன் ஜாமீன் கேட்டு மணி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மணி மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்படி போலீசார் கற்பழிப்பு உள்ளிட்ட 3 சட்ட பிரிவுகளின் கீழ் மணி மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.