தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். ஆந்திராவை பூர்விகமாக கொண்ட யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். தென்னிந்திய மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் யாஷிகா கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் தன் நண்பர்களுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் மார்ச் 21-ஆம் தேதி வந்தபோது யாஷிகா நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரெண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று வழக்கின் விசாரணையில் நடிகை யாஷிகா நேரில் ஆஜர் ஆனார். அவர் தனக்கு உடல் நலம் சரியில்லாததால் கடந்த விசாரணையில் ஆஜராக முடியவில்லை எனக் கூறினார். மேலும் இதைக் கேட்ட நீதிபதி ஏப்ரல் 25-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு அவர் மீதான பிடிவாரண்டை தளர்த்தி ‌ உத்தரவிட்டார்.