தர்மபுரியில் இருந்து அரசு டவுன் பேருந்து பயணிகளுடன் நாகர்கூடல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இண்டூர் அவ்வை நகர் அருகே இருக்கும் வளைவில் திரும்பிய போது சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அம்பிகா, சர்வேஷ், சிவகுமார் உள்பட 26 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளத்தில் கவிழ்ந்த அரசு டவுன் பேருந்து…. காயமடைந்த 26 பேர்…. கோர விபத்து…!!
Related Posts
விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …
Read moreஅதிர்ச்சி…! லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!
கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3…
Read more