தர்மபுரியில் இருந்து அரசு டவுன் பேருந்து பயணிகளுடன் நாகர்கூடல்  நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இண்டூர் அவ்வை நகர் அருகே இருக்கும் வளைவில் திரும்பிய போது சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அம்பிகா, சர்வேஷ், சிவகுமார் உள்பட 26 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.