டெல்லியில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பயணிகள் ஏசி போடச் சொன்னபோது மறுத்து வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. “நீங்கள் தொப்பி மற்றும் ஸ்வெட்டர் அணிந்திருப்பதால் உங்களுக்கு ஏசி தேவையில்லை” என்று அந்த ஓட்டுநர் வாதிட்டார். இதைச் சற்றும் ஏற்காத பயணி, உடனடியாக ஆப் மூலமாகப் புகார் அளிக்க முயன்றார். இந்தச் சம்பவம் குறித்து ஆன்லைனில் பெரிய விவாதம் எழுந்துள்ளது.
स्वेटर टोपी पहनके इनको कैब मे AC चलवानी है
100 रुपये मे गाड़ी ही नाम कर दे इनके pic.twitter.com/xH1Mw0ISox
— Nehra Ji (@nehraji77) November 24, 2025
ஏசிக்கான கட்டணம் பயணச் செலவில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுவிட்டது என்றும், தூசி மற்றும் சத்தம் காரணமாக ஜன்னல்களை மூடி ஏசி போடுவதுதான் சரி என்றும் பல பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எரிபொருள் செலவு அதிகமாக இருப்பதால், ஏசி போட மறுப்பதாக ஓட்டுநர்கள் சொல்வது வழக்கம். வாடிக்கையாளர் பணம் கொடுத்தும் சேவை மறுக்கப்படுவது தவறு என்று பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
