பான் எண்ணுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கு மார்ச் 31 கடைசி தேதி ஆகும். இத்தேதிக்கு பின் நீங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாது. இதையடுத்து நீங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கவேண்டும் எனில், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். தற்போது பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டு உள்ளதா இல்லையா என்பதை எப்படி அறிவது என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.

முதலாவதாக incometax.gov.in என்ற இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன்பின் ஆதார் நிலையை இணைக்கவும் எனும் விருப்பத்தைக் கண்டுபிடித்து கிளிக் செய்ய வேண்டும். திறக்கும் புது விண்டோவில் View Link ஆதார் நிலையை கிளிக் செய்ய வேண்டும். ஆதார்-பான் இணைக்கப்பட்டு இருந்தால், உங்களுக்கு ஒரு செய்தி காட்டும். ஆதார் -பான் இணைக்கப்படவில்லை எனில், அவற்றையும் இங்கே இணைக்கலாம்.