பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க கோரி அரசு வலியுறுத்தி வருகிறது. நீங்கள் இதுவரை பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லையெனில், ஜூன் 30 2023-க்குள் அவற்றை இணைக்கவேண்டும். இல்லையென்றால் ஜூலை 1, 2023 முதல் அதை பயன்படுத்த முடியாது. பான் கார்டு வைத்திருப்போர் இந்த காலக்கெடுவுக்குள் ஆதார்-பான் இணைப்பு செயல்முறையை செய்யாவிட்டால் அவர்களின் 10 இலக்க எண்ணெழுத்து கொண்ட பான்கார்டு செயல்படாது.

பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்துவது இது முதன் முறை கிடையாது. ஆதார்-பான் இணைப்பு செயல்முறைக்கான காலக்கெடுவை ஜூன் 30, 2023 வரை நீட்டித்து உள்ளது. இந்த செயல்முறைக்கு தற்போது ரூபாய்.1000 கட்டணம் செலுத்தவேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.