
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தேனிலவிற்காக சென்ற இடத்தில் ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் போன்ற சம்பவம் ஜார்கண்டிலும், ஆந்திராவிலும் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் துப்பறியும் ஆய்வாளர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் மணப்பெண்கள் பற்றி விசாரிக்கும் சூழல் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக துப்பறியும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ராஜேஷ் பாண்டே, தேனிலவிற்கு சென்ற சோனம்-ரகுவன்ஷியின் வழக்கை தொடர்ந்து மணப்பெண்களை விசாரிப்பதற்காக வந்து கொண்டே இருக்கின்றனர். அவர்கள் பெண்ணின் குணாதிசயங்கள், ஏற்கனவே காதலில் இருந்தாரா, ஆண் நண்பர்கள் இருக்கிறார்களா என பல கோணங்களில் கேட்கிறார்கள்.
தற்போது மட்டுமே 18 வழக்குகள் வந்துள்ளது என்று கூறினார். பின்னர் அதிரடி துப்பறியும் சேவைகளின் மண்டல தலைவர் சுபாஷ் சவுத்ரி, இதற்கு முன் இதுபோல துப்பறியும் கோரிக்கைகள் வருவது கிடையாது. ஆனால் தற்போது துப்பறியும் தேவை அதிகரித்துள்ளது என கூறினார்.
மிகவும் கடினமான சூழலில் சிலர் துப்பறியும் நபர்களை பணியில் அமர்த்தி தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்கின்றனர். தேன் நிலவிற்கு சென்ற ஜோடியின் வழக்கு தற்போது திருமண வாழ்க்கைக்கு ஒரு புதிய பயத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பறிவு நிறுவனங்கள் சில ரூ.25 முதல் 1 லட்சம் வரை விவரங்கள் எடுத்துக் கொடுப்பதற்காக வசூலிக்கிறார்கள்.
இதில் குரல், ஆடை ,நண்பர்களின் குழு, தினசரி எங்கெங்கு செல்கிறார்கள்?, ஆன்லைனில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள்? என்பதும் தெரியவந்து விடும். இதுகுறித்து மருத்துவ உளவியலாளர் டாக்டர் சத்யகாந்த் வீதி கூறும் போது இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது சந்தேகத்துடன் தொடங்கப்படுகிறது. ஆனால் நம்பிக்கையுடன் தொடங்கினால் வாழ்வு நன்றாக இருக்கும் என்று கூறினார்.