தஞ்சை மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் அருகே தேவன் குடி சுப்பிரமணியர் கோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சோபனா (22). இவருக்கும் திருக்காட்டு பள்ளியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் திருமணம் நின்று போனது. இதனால் மனமுடைந்த சோபனா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மண்ணெண்ணெய்  எடுத்து தனது உடல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உடல் கருகி படுகாயம் அடைந்த சோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார். இது குறித்து கபிஸ்தலம் காவல் நிலையத்தில் சோபனாவின் தந்தை புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோபனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.