நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நேற்று நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. நேற்று தமிழகத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவி தவறான தேர்வு மையத்திற்கு சென்று மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இதைப் பார்த்த ஆவடி போலீசார் மாணவியின் தேர்வு மையத்தை அறிந்து தங்கள் வாகனத்தில் அவரை ஏற்றி சென்று நீட் தேர்வு மையத்தில் சென்று விட்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோவை ஆவடி போலீசார் twitter பக்கத்தில் பகிர்ந்து நேற்று ஆனந்தி என்ற மாணவி நீட் தேர்வு மையம் தெரியாமல் தவித்ததால் அவரை காவலர்கள் தினேஷ் குமார் மற்றும் தனசேகரன் ஆகியோர் போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்று தக்க சமயத்தில் தேர்வு எழுதும் மையத்தில் சேர்த்தனர் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் மாணவியை உரிய நேரத்தில் தேர்வு எழுதும் மையத்திற்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்ற காவலர்களுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.