உழைப்பின் மூலம் சூப்பர் ஸ்டார் ஆக மாறியவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் தமிழ் கலாச்சாரத்தை பற்றி பெருமையாக பேசுபவர். மேலும் ஈகோ இல்லாதவர். இவரின் இந்த குணம் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரையும் கவர்ந்துள்ளது.

ரஜினி குறித்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் தியாகராஜன் கூறியுள்ளதாவது, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி நடித்த திரைப்படத்திற்காக பொள்ளாச்சி சென்றோம். அப்போது அங்கு ஹோட்டலில் புக் செய்து இருந்த அறைகளில் ரஜினியை விட சிரஞ்சீவிக்கு அறை சிறியதாக இருந்தது. ஹோட்டலுக்கு சென்றதும் தன் அறையை பார்த்த ரஜினி உடனே சிரஞ்சீவியின் அறைக்குச் சென்றார்.

இது ஏன் என் அறையை விட சிறியதாக இருக்கின்றது. நாம் அழைத்ததை மதித்து வேறு மாநிலத்தில் இருந்து வந்திருக்கின்றார். அவரின் மனம் குளிரும்படி நடந்து கொள்ள வேண்டும். இதுதான் தமிழர்களின் பாரம்பரியம். என் அறையை சிரஞ்சீவிக்கு கொடுத்து விடுங்கள் என ரஜினி கூறினாராம்.

பெரிய சூப்பர் ஸ்டார் ஆக இருந்தாலும் அனைவரையும் சரிசமமாக பார்ப்பது தான் ரஜினியின் நல்ல குணம். இப்படி ஒரு மனிதரை இந்த காலத்தில் பார்ப்பது அரிது. அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கின்றார் என தியாகராஜன் தெரிவித்திருக்கின்றார். இதனை ரசிகர்கள் பெருமையாக பேசி வருகின்றார்கள்.