தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி மற்றும் பீஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக இருந்தாலும் கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட், தெலுங்கில் ராதே ஷ்யாம், பாலிவுட் வெளியான சர்க்கஸ் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இது நடிகை பூஜாவுக்கு வருத்தம் தான் என்றாலும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நேர்மறையான சிந்தனைகளுடன் செயல்படுகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகை பூஜா தொடர் தோல்விகள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, வாழ்க்கையில் நம் கையில் எதுவுமே இல்லை. சில சமயங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் தவறாக முடியலாம். தவறு நடந்தால் அதற்குரிய காரணத்தை கண்டறிந்து என்னுடைய தவறை நான் முழுமையாக திருத்திக் கொள்வேன். ஏனெனில் தவறு நடக்கும்போது நான் கற்றுக்கொண்ட பாடங்களால் தான் தற்போது இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன். மேலும் இனி கவனமுடன் படங்களை தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார்.