தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சிம்பு. அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்த சிம்பு, இயக்குனர், பாடல் ஆசிரியர் மற்றும் பாடகர் என பன்முக திறமைகளைக் கொண்டவராக திகழ்கிறார். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் நடிகர் சிம்பு சென்னையில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த நிகழ்வில் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்கு நடிகர் சிம்பு பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதோடு தன்னுடைய ரசிகர்களுக்கு தன் கையால் சிம்பு  பிரியாணியை பரிமாறியுள்ளார். அதன் பிறகு ரசிகர்களுடன் கலந்துரையாடிய சிம்பு அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.