பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் பிரபலமான பொற்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே உள்ள பார்க்கிங்கில் நேற்று நள்ளிரவு திடீரென ஒரு பெரிய கண்ணாடி வெடித்து சிதறியது. இந்த கண்ணாடி வெடித்து சிதறியதில் பார்க்கிங் அருகே படுத்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இது வெடிகுண்டு தாக்குதலாக இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் வெடிகுண்டு தாக்குதல் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதாவது பார்க்கிங் அருகே உள்ள உணவகத்தில் இருந்து அதிகப்படியான வெப்பம் வந்ததால் கண்ணாடி உடைந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பக்தர்கள் யாரும் வெடிகுண்டு தாக்குதல் என நினைத்து அச்சப்பட வேண்டாம் என போலீசார் கூறியுள்ளனர்.