இந்தி டைரக்டர் சுதீப்டோ சென், “தி கேரளா ஸ்டோரி” எனும் பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. அதில் கேரளாவிலிருந்து 32 ,000 இளம் பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றது. இந்த படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என கேரள அரசுக்கு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். இருப்பினும் இந்த படம் கடும் எதிர்ப்புக்கு இடையே திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் குருகுராமில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசியதாவது “தி கேரளா ஸ்டோரி வெறும் படம் அல்ல, பெண்களை தீவிரவாத பாதைக்கு இழுக்க நினைக்கும் சிலரின் முகம் இந்த படத்தில் அம்பலமாகி உள்ளது. இந்த படத்திற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் போராட்டம் பயங்கரவாதம், PFI மற்றும் ISIS-க்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.