சத்தீஸ்கரில் வீட்டு வாசலில் விளையாடிய இரண்டு வயது மகனை கழுதைபுலி இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கரில் வனப்பகுதியை ஒட்டிய ஒரு வீட்டின் வாசலில் இரண்டு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் வனப்பகுதிக்குள் இருந்து இதனை கவனித்த கழுதைபுலி போன்ற அந்த சிறுவனை தாக்கி வாயில் கவ்வியபடி இழுத்துச் சென்றுள்ளது.

இதனை பார்த்த சிறுவனின் தாய் அதனை துரத்தி பின் சென்றுள்ளார். ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு காட்டுக்குள் விடாமல் பின் தொடர்ந்து சென்ற அந்த தாய் தனது மகனை கழுதைப்புலியிடம் இருந்து மீட்டுள்ளார். இதன் பின்னர் அருகில் இருந்தவர்களின் உதவியோடு சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் பலத்த காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.