பெகாசஸ் உளவு செயலி ராகுல் தொலைபேசியில் இல்லை. அது அவரது மனதில் தான் இருக்கிறது என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார். பெகாசஸ் காங்கிரஸின் டிஎன்ஏவில் நுழைந்துள்ளதாகவும் ராகுல் காந்தியின் அறிவுத்திறனை கண்டு பரிதாபப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் அவர் வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவுக்கு எதிராக பேசி வருவதாகவும் இந்தியா குறித்து வெளிநாடுகளுக்குச் சென்று விமர்சிப்பது தேசத்துக்கு எதிரானது எனவும் குற்றம் சாட்டினார்.