
கேரளா மாநிலத்தில் கோவிட் நோயாளியான 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது கேரளாவை சேர்ந்த ஒரு 19 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அப்போது ஆம்புலன்சில் இருந்த நபர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அந்தப் பெண் தனக்கு நடந்ததை பற்றி அங்கிருந்த ஊழியர்களிடம் கூறினார். பின்னர் அந்தப் பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்த நௌபல் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடுமையான சவால்களை எதிர்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் கொரோனா பரவல் மிக அதிகமாக இருந்த காலத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும் சாட்சிகளை சேகரிப்பது கடினமாக இருந்ததாகவும் கூறினர். தற்போது இந்த குற்றவாளிக்கு நீதிமன்றம் தக்க தண்டனை வழங்கியுள்ளது. அதன்படி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ரூ. 2,12000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் நடந்த நேரத்தில் ஒரு பெண் கோவிட் நோயாளியை தனியாக அனுப்பிய சுகாதாரத்துறை மீது பலரும் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்திருந்தனர்.