கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் 2023 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வரை டி.ஜி யாத்ரா முறையை 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் பயன்படுத்தி இருப்பதாக உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. இந்த டிஜி யாத்ரா என்பது முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விமான நிலையங்களில் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கான பயோ மெட்ரிக் முறையாகும்.

இதில் பயணச்சீட்டு மற்றும் அடையாள அட்டை போன்றவற்றை பல்வேறு நிலையங்களில் சரிபார்த்தலின் அவசியம் இல்லாமல், கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிகளுக்கு வசதியான முறையாக அமைந்துள்ளது. மேலும் அனைத்து விமான நிலையங்களிலும் படிப்படியாக டிஜி யாத்ரா  தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் முதற்கட்டமாக டெல்லி, பெங்களூர், வாரணாசி விமான நிலையங்களில் 1.12.2022 அன்று ஜோதிர் ஆதித்ய சிந்தியாவால் இந்த தொழில்நுட்பம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.