பள்ளி கல்வித்துறை சார்பில் 3- ஆம் பருவத்திற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சியில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ஒன்றியத்தில் இருக்கும் 92 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் இருந்து 118 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களை எவ்வாறு கற்பிக்க வேண்டும், கற்றல், கற்பித்தல் துணை கருவிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கையேடுகள் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன் நேரடியாக ஆய்வு செய்துள்ளார். மேலும் பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், முதுநிலை விரிவுரையாளருமான வசந்தி வட்டார கல்வி அலுவலர்கள் சம்பத், முத்தமிழன் கருத்தாளர்கள், ஆசிரியர் பயிற்சிநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு “எண்ணும், எழுத்தும் பயிற்சி”….. கல்வி அதிகாரியின் நேரடி ஆய்வு…!!
Related Posts
மனைவிக்கு கொடுத்த வாக்கு… இறந்த பிறகு கணவன் செய்த நெகிழ்ச்சி செயல்……!!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டாம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்துள்ள நிலையில் இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கற்பகவல்லி என்பவர் உடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில்…
Read more“இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம்”…. வாலிபர்கள் வெறிச்செயல்….!!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் என்னுடன் சமய சந்துரு (20) என்பவர் படித்து வந்தார். அவர் ஆசை வார்த்தை கூறி…
Read more