பாஜக தலைவர் கே. அண்ணாமலையின் 42-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், இயற்கையை மீட்டெடுக்கும் நோக்கிலும் பிரம்மாண்டமான பனை விதைப்பு நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘We The Leaders’ அறக்கட்டளையின் சார்பாக நடத்தப்பட்ட இந்தச் சிறப்பு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அண்ணாமலையின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் மொத்தம் 10,042 பனைவிதைகளும், 42 முதிர்ந்த பனை மரங்களும் அப்பகுதியில் நடப்பட்டன.

இந்தத் தூய பசுமை முயற்சியில் சாட்டையண்ணையா சாமியப்பன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும், தன்னார்வலர்களும் மிகுந்த ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை வழங்கினர்.

“ஒரு விதை… பல உயிர்களைக் காக்கும்; ஒரு மரம்… பல தலைமுறைகளுக்கு நிழல் தரும்” என்ற அழகான மற்றும் விழிப்புணர்வுமிக்க கருப்பொருளை மையமாக வைத்து இந்தச் சமூகப் பணி நடைபெற்று முடிந்துள்ளது.

பிறந்தநாளை வெறும் கொண்டாட்டமாகக் கடந்து செல்லாமல், வருங்காலச் சந்ததியினருக்குப் பயனுள்ள வகையில் ஈரோட்டில் நடைபெற்ற இந்த நூதனமான பனை மரம் வளர்க்கும் நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

“>

 

இயற்கையை நேசிக்கும் பலரும் இந்தச் பசுமை முயற்சிக்குத் தங்களது சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.