நடிகை த்ரிஷாவுக்கு எதிராகத் தற்போது முன்வைக்கப்படும் அவதூறு விமர்சனங்கள், கடந்த காலத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களை நினைவூட்டுவதாக அமைத்துள்ள கருத்து ஒன்று தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் சிலர் கீழ்த்தரமாக விமர்சித்ததைச் சுட்டிக்காட்டி, தற்போதைய நடிகை த்ரிஷா மீதான விமர்சனங்களும் அதே போக்கைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிமனித சுதந்திரத்தில் தலையிட்டு அவதூறு பரப்பும் விமர்சகர்களுக்குக் காலப்போக்கில் மக்கள் தங்களது தீர்ப்பின் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர் என்பதை வரலாறு பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் நல்லவர்கள், மக்களுக்கு உண்மையாக உழைப்பவர்கள் யார் என்பதைப் பொதுமக்கள் மிகத் தெளிவாக அறிந்திருப்பதால், இதுபோன்ற மட்டமான விமர்சனங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்ற கருத்து சமூக வலைதளங்களில் பலரால் விவாதிக்கப்பட்டு வருகிறது.

“>

 

தனிமனித தாக்குதல்களையும், பெண்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரங்களையும் மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள இந்த விவகாரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.