நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா ஆலோங் பகிர்ந்துள்ள ஒரு நகைச்சுவையான வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அதில், நாகா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் KYC சரிபார்ப்பின்போது கண் ஸ்கேன் செய்ய முயற்சிக்கிறார். ஆனால், பலமுறை முயற்சித்தும் பயோமெட்ரிக் சாதனத்தால் அவரது கண் ஸ்கேன் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. இதனால், வழக்கமான டிஜிட்டல் சரிபார்ப்பு செயல்முறை எதிர்பாராத விதமாக நகைச்சுவையான தருணமாக மாறியது.
கண் ஸ்கேனர் அவரது கண்ணை அடையாளம் காணத் தொடர்ந்து சிரமப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவருக்கு உதவ முயன்றனர். ஸ்கேனர் சரியாகப் படம்பிடிக்க வேண்டும் என்பதற்காக, சிலர் அவரது கண் இமைகளைத் திறந்து வைத்துக் கொள்ள உதவினர். இந்த முயற்சிகளுக்கு இடையே அங்கிருந்தவர்கள் சிரித்ததால், அந்தச் சம்பவம் மேலும் நகைச்சுவையான சூழலை ஏற்படுத்தியது.
OPEN YOUR EYES 😄
A video originating from Nagaland has gone viral on X following repeated failures of a KYC biometric application to recognise the eyes of a Naga individual. In an effort to facilitate the scanning process, several individuals were observed assisting by holding… pic.twitter.com/Q2Z5Vask8w
— The Proud Indian (@DynastyDoungel) August 13, 2026
இந்த விடியோவைப் பகிர்ந்த அமைச்சர் டெம்ஜென் இம்னா ஆலோங், “Struggle is real” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஒரு சாதாரண KYC சரிபார்ப்பை முடிப்பதற்கே ஏற்பட்ட சிரமத்தை நகைச்சுவையாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அதேநேரத்தில், இந்தச் சம்பவம் சிரிப்பை ஏற்படுத்தினாலும், பல்வேறு உடல் அம்சங்களைக் கொண்ட மக்களிடம் பயோமெட்ரிக் தொழில்நுட்பங்கள் சமமாகவும் துல்லியமாகவும் செயல்படுகின்றனவா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. குறிப்பாக, கண் ஸ்கேன் போன்ற அடையாளச் சரிபார்ப்பு முறைகள் அனைத்து பயனர்களுக்கும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
