தமிழ்நாடு அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கையின் போது, சென்னை காவல் துறை ஆணையர் அமல்ராஜ் காட்டிய அதிரடி மற்றும் கண்டிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராகத் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்த விவகாரத்தில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த அதிரடி நடவடிக்கையைக் கண்டித்துத் திரண்ட திமுக தொண்டர்கள் காவல் துறையினருடன் கடுமையான வாக்குவாதத்திலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
உதயநிதி ஸ்டாலினை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் நேரத்தில், கோபமடைந்த திமுக தொண்டர்கள் சிலர் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டு இருந்த இரும்புத் தடுப்புகளைத் தாண்டி குதிக்க முயன்றனர்.
அதில் ஒரு தொண்டர் ஆக்ரோஷமாகப் பாரிக்கேடு மீது ஏறிப் போராட்டத்தில் குதிக்க முற்பட்டதைக் பார்த்த சென்னை காவல் துறை ஆணையர் அமல்ராஜ், கணப்பொழுதும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் திரும்பிச் சென்று அந்த நபர் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்.
“என்னடா திமிர்…” என்ற ரீதியில் சீறிப்பாய்ந்து அவரைத் தாக்கித் தூக்கி வெளியே எறியுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்ததுடன், ஆக்ரோஷம் குறைந்தபாடில்லாமல் முழக்கமிட்டுக் கொண்டே அங்கிருந்து நடைபோட்டார்.
காவல்துறையின் இந்த அதிரடியான மற்றும் எதற்கும் அஞ்சாத நடவடிக்கையானது அரசியல் களத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போடு..! உதயநிதியை கைது செய்து அழைத்து சென்ற போது பேரிகார்ட் மீது ஏறி குதித்த நபரை வெளுத்து வாங்கிய சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ்..! சட்டென திரும்பி முறைத்த நபரை என்ன என்று கேள்வி கேட்டு பதிலுக்கு முறைத்தபடியே சென்ற அமல்ராஜ்..!#PoliceCommissioner | #DMK | #UdhayanidhiStalin |… pic.twitter.com/4iiHiSXldX
— Polimer News (@polimernews) August 4, 2026
“>
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை எதிர்த்துத் தொண்டர்கள் நடத்திய போராட்டம் ஒருபுறம் இருக்க, காவல்துறை ஆணையரே நேரடியாகக் களத்தில் இறங்கித் தொண்டர்களைச் சமாளித்த இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
