தெலங்கானா மாநிலத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் போக்சோ கீழ் கைது செய்யப்பட்ட ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமார் (35) என்ற நபர், பழிவாங்கும் நோக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை பெண்கள் மற்றும் தனது சொந்த மனைவி, குழந்தைகள் உட்பட 6 பேரை கொடூரமாகக் கொன்ற சம்பவம் ஒட்டுமொத்த பகுதியையும் உலுக்கியிருக்கிறது.
கடந்த மே மாதம் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜூலை மாதம் ₹20,000 தனிநபர் பிணையில் வெளியே வந்த ராஜ்குமார், நள்ளிரவில் புகார்தாரரின் வீட்டிற்குள் புகுந்து சிறுமியின் தாய் மற்றும் உறங்கிக்கொண்டிருந்த 65 வயது பாட்டியைத் தட்டித் தூக்கியுள்ளார்.
பின்னர் அந்தச் சிறுமியைக் காரில் கடத்திச் சென்று ஏரிக்கரையில் கொலை செய்துவிட்டு, நேராகத் தனது வீட்டிற்கு வந்து 31 வயது மனைவி பார்வதி சரிதா, மற்றும் 4 வயது, 18 மாதங்கள் மட்டுமே ஆன தனது இரண்டு மகன்களையும் கொலை செய்துள்ளார். பிறகு தனது தந்தைக்கு போன் செய்து, “இதை நான் செய்துவிட்டேன், இவர்களைக் கொலை செய்துவிட்டேன்” எனக் குறிப்பிட்டு தலைமறைவாகியுள்ளார்.
சூதாட்டப் பழக்கமும், கடுமையான கடன் தொல்லையும் கொண்ட இந்தச் சைக்கோ கொலையாளியைப் பிடிக்க தற்பொழுது தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல்வேட்டை நடந்து வருகிறது.
