தமிழகத்தில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் (X) தளத்தில் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ​அவர் தனது பதிவில், “தமிழகம் முழுவதும் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டருக்குள் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வலியுறுத்துவோம்;

இதற்காக மக்கள் நேரடியாகவோ அல்லது ‘WE THE LEADERS’ அமைப்பின் மூலமாகவோ மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்போம்; மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம்; மாறுவோம், மாற்றுவோம்!” என்று தமிழக மக்களுக்கு அதிரடி அழைப்பு விடுத்துள்ளார். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக அண்ணாமலை கையில் எடுத்துள்ள இந்த புதிய மூவ், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.