இந்தியாவின் மிகக் கடினமான ஐஐடி நுழைவுத் தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்து, வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று விரக்தியின் விளிம்பிற்குச் சென்ற மிடில் கிளாஸ் இளைஞர் ஒருவர், தற்போது தனது கடின உழைப்பால் துபாயில் ஒரு மாபெரும் நிறுவனத்தின் இளம் உழைப்பு ஆக உயர்ந்து சாதித்துள்ள நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“சின்ன ஊர்களில் நாம் தோற்றுவிட்டால், சுற்றியுள்ளவர்களின் , ஒப்பீடு‌ நம்மை நிம்மதியாக வாழ விடாது” என்று தனது கடந்த கால வலிகளைப் பகிர்ந்துள்ள அந்த இளைஞர்,வீட்டின் ஏழ்மை நிலை காரணமாக கல்வி கடன் பெற்று, பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து, ஒரு சாதாரண ஐடி சப்போர்ட் வேலையில் வெறும் 20,000 ரூபாய்.

“ஒரு சமோசாவை மட்டும் சாப்பிட்டே எத்தனையோ நாள் பசியோடு ஓட்டியிருக்கேன், ஆனால் என் குடும்பத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்தேன். ஆபீஸ் நேரம் போக இரவு நேரங்களில் சொந்தமாக ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, இன்று ஐஐடி-யில் பாஸ் செய்த தனது நண்பர்களுக்கு இணையாக டாப் லெவலில் சம்பாதிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

“>

ஒரு காலத்தில் ஒரு பாக்கெட் பால் வாங்கக் கூட காசில்லாமல் தவித்த தனது குடும்பத்தை, இன்று நினைத்ததை வாங்கும் அளவிற்கு மாற்றியமைத்த இந்த வாலிபரின் அரிய மோட்டிவேஷனல் ஸ்டோரிக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.