சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நபர் அதிவேகமாகச் செல்லும் ரயிலின் மீது மோதித் தூக்கி வீசப்படும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த நபர் ரயிலை நோக்கி கைகளை அசைத்தபடி ஓடிச் சென்று, திடீரென ரயில் மீது மோதிக் கொள்கிறார்.

இந்த மோதலின் வேகம் காரணமாக அவர் பல அடி தூரம் தூக்கி வீசப்படுகிறார். இந்தச் சம்பவம் எப்போது, எங்கே நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இல்லை என்றாலும், வீடியோவை பார்த்த பலரும் இதைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த பயனர்கள் பலரும், இது தற்கொலை முயற்சியாக இருக்கலாம் அல்லது கவனக்குறைவாக நடந்த விபத்தாக இருக்கலாம் எனப் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

“>

 

ரயில் பாதைகளுக்கு அருகிலோ அல்லது ஓடும் ரயிலுக்கு அருகிலோ செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், சிறிய கவனக்குறைவு கூட மிகப்பெரிய உயிரிழப்பிற்கு வழிவகுக்கும் என்றும் மக்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் இத்தகைய வீடியோக்கள், ரயில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றன.