இணையத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், சிறுவன் ஒருவன் தனது சைக்கிளை மோட்டார் சைக்கிள் போலவே மாற்றி அமைத்து, அதன் சத்தத்தையும் தன் வாயால் தத்ரூபமாகப் பேசி ஓட்டிச் செல்லும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.

சைக்கிளின் பின் பகுதியில் ஒரு எக்ஸாஸ்ட் பைப் போன்ற அமைப்பை வைத்து அவன் அலங்கரித்திருந்த விதம் காண்போரை வியக்க வைத்தது. இந்தச் சிறுவனை நிறுத்திய காவல்துறையினர், அவனது இந்தச் சுட்டித்தனத்தையும், சைக்கிளை மோட்டார் பைக் போல அவன் பயன்படுத்திய விதத்தையும் கண்டு சிரித்து மகிழ்ந்தனர்.

காவல்துறையினரிடம் பிடிபடாமல் தப்பித்த அந்தச் சிறுவனின் கள்ளங்கபடம் இல்லாத சிரிப்பும், அவனது கனவை நோக்கிய அந்தச் சிறு முயற்சியும் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

“>

 

எதிர்காலத்தில் நீ ஒரு நிஜமான மோட்டார் பைக்கை ஓட்டுவாய் என்று நெட்டிசன்கள் அவனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.