மும்பையில் உபெர் கார் ஓட்டுநர் ஒருவர், கூடுதல் கட்டணம் கேட்ட தகராறில் பெண் பயணியைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மஹாலக்ஷ்மியிலிருந்து நேருலுக்குச் சென்ற ஷிவானி என்ற பெண் பயணி, ஆப் மூலம் காட்டிய கட்டணத்தை விட கூடுதலாக 40 ரூபாய் கேட்டதை மறுத்தபோது, ஓட்டுநர் தன்னைத் தாக்கியதாகப் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும், உபெர் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஓட்டுநரின் பாதுகாப்பு குறித்துப் பேசி, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணக்கையே தற்காலிகமாக முடக்கியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து புகார் அளித்த பிறகும், அந்த ஓட்டுநர் தொடர்ந்து உபெர் தளத்தில் பணியாற்றி வருவது பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
View this post on Instagram
“>
இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணக்கு, அவரது குடும்பத்தினர் தலையிட்ட பின்னரே மீண்டும் சரி செய்யப்பட்டது, ஆனால் ஓட்டுநர் மீது எந்த விதமான கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் புகார்களைக் கையாள்வதில் உபெர் நிறுவனத்தின் மெத்தனப்போக்கு தற்போது பொதுமக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பெண்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதில் உள்ள சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
