தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) மிகப்பெரிய முன்னிலை பெற்று வருவதை அடுத்து, நடிகர் விஜய்யின் தந்தை மற்றும் பிரபல இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தேர்தல் நிலவரங்களை தனது குடும்பத்தினருடன் இணைந்து தொலைக்காட்சியில் நேரலையாகப் பார்த்த அவர், விஜய்யின் வெற்றியைப் பார்த்து மிகுந்த பெருமிதம் அடைந்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த இரு துருவ அரசியலை உடைத்து, எந்தவிதமான பெரிய கூட்டணிகளும் இன்றி தனித்து நின்று விஜய் இந்த வெற்றியைப் பெற்றுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது என அவர் பாராட்டியுள்ளார்.
#WATCH | Chennai, Tamil Nadu: On TVK currently leading in 110 seats of the total 234 in the state, Director and TVK chief Vijay's father, SA Chandrasekhar, says, "As a father, I am very proud and happy. My wishes to my son. In the last two years, his confidence has been fantastic… pic.twitter.com/gsdLPatYbd
— ANI (@ANI) May 4, 2026
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இது என் மகனின் விடாமுயற்சிக்கும், அவர் மக்கள் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும் கிடைத்த பரிசு. ஆரம்பத்தில் விஜய்யின் அரசியல் வருகையைக் கிண்டல் செய்தவர்களுக்கு இந்த வெற்றி ஒரு சரியான பதிலடி. ஒரு தந்தையாக அவனைப் பார்த்து நான் இன்று மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். கூட்டணியின்றித் தனித்து நின்ற விஜய்யின் தைரியம் தான் இன்று அவரை இந்த உயரத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். விஜய்யின் வெற்றியை அவரது தாய் ஷோபா சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர் விசில் அடித்துக் கொண்டாடும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
