கோவாவிற்கு சுற்றுலா வரும் பயணிகளை இலக்கு வைத்து நடத்தப்படும் புதிய வகை மோசடி குறித்து உள்ளூர் நபர் ஒருவர் எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியில், மர்ம நபர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் “அதிர்ஷ்டக் குலுக்கல் கூப்பன்களை” வழங்கி, அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகள் அல்லது மலிவான சுற்றுலாத் திட்டங்கள் காத்திருப்பதாகக் கூறி ஆசை காட்டுகின்றனர்.
இது குறிப்பாகத் தம்பதிகளைக் குறிவைக்கும் இந்த கும்பல், அவர்களை ஒரு குறிப்பிட்ட உணவகத்திற்கோ அல்லது அலுவலகத்திற்கோ வரவழைத்து பணத்தைப் பறிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது போன்ற செயல்கள் கோவாவின் நற்பெயரைக் கெடுப்பதோடு, ஒட்டுமொத்த சுற்றுலாத் துறையையும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அந்த வீடியோவில் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
This happened to me in Mumbai. One evening, while entering a shopping mall with my family, we were handed 2-3 coupons at the entrance. I passed them to my wife without thinking much.
The coupons had some numbers printed on them.
A few days later, I received a call informing me… pic.twitter.com/PDitOieDWy
— New Bharat Speaks 🇮🇳 (@Vishwas1228) April 25, 2026
“>
இதனால் சம்பவம் குறித்து வெளியான வீடியோவில், அந்த உள்ளூர் நபர் இருசக்கர வாகனத்தில் வந்த மோசடி நபர்களைத் தடுத்து நிறுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். “இவர்கள் ஏமாற்றுக்காரர்கள், இவர்களிடம் பேசி உங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணாக்காதீர்கள்” என்று பயணிகளை எச்சரிக்கும் அவர், அந்த நபர்களைக் காவல்துறையிடம் ஒப்படைக்க முயன்றபோது அவர்கள் தப்பிச் சென்றனர்.
இது ஒரு பழைய மோசடி முறை என்றும், இந்தியா முழுவதும் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் இணையவாசிகள் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் இது போன்ற போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அறிமுகமில்லாத நபர்கள் தரும் இலவசப் பொருட்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
