“தெய்வம் மனுஷ ரூபத்தில் வரும்” என்பார்கள், அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. விளையாட்டுத் தனமாகச் சென்ற ஒரு சிறுவன், எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின்சாரக் கம்பம் ஒன்றைத் தொட்ட நிலையில், பயங்கரமான மின்சாரம் பாய்ந்து (Electric Shock) அங்கேயே துடிதுடித்துச் சுருண்டு விழுந்தான்.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் அலறியடித்துக் கொண்டு ஓட, அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. அந்தச் சிறுவனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அந்த நொடியில் தான், ஒரு மாவீரன் அங்கே தோன்றினார்.
தன் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், வெறும் கையாலேயே அந்தச் சிறுவனை மின்னல் வேகத்தில் பிடித்து இழுத்துக் காப்பாற்றினார் அந்த நபர். ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அந்தச் சிறுவனின் உயிர் பிரிந்திருக்கும். ஆனால், அந்த நபர் காட்டிய அசாத்திய தைரியம் ஒரு பிஞ்சு உயிரை மீட்டெடுத்துள்ளது.
एक बच्चे को अचानक से करेंट लग गया लोगों में भगदड़ मच गई 😱
तभी एक जाबाज मर्द आता है बिना अपनी जान की परवाह किए बिना किसी चीज के सपोर्ट के उस बच्चे को बचा लेता है😳 pic.twitter.com/GHQyC5IgvY
— Talib Shaikh X (@TalibShaikh143) March 30, 2026
தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், அந்தப் பெரியவரின் வீரத்தை ஊரே கொண்டாடி வருகிறது. நிஜமான ‘சூப்பர் மேன்’ இவர்தான் என்று நெட்டிசன்கள் பாராட்டித் தள்ளி வருகிறார்கள்.
