இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள சுஜான்பூர் பகுதியில், தாயுடன் சாலையில் நடந்து சென்ற சிறுவனைத் தெருநாய் ஒன்று திடீரென கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் தன் தாய்க்குப் பின்னால் அமைதியாக நடந்து சென்றபோது, எங்கிருந்தோ ஓடி வந்த நாய் ஒன்று அவனது காலைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளியது.
மேலும் இதைக் கண்டு பதறிய தாய் உடனடியாக ஓடி வந்து நாயை விரட்டினார். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் தூண்டியுள்ளது.
Sujanpur, Himachal Pradesh
No town or village in the country is safe from the menace of #StrayDogs now. Our Streets and Roads are not safe for our Children because of these Dogs.pic.twitter.com/LD4GXvRane— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) March 19, 2026
“>
இந்தக் காணொளி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, தெருநாய்களின் பெருக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன. “இவை அனைத்தும் கொல்லப்பட வேண்டும்” என்பது போன்ற கடுமையான கருத்துகளைச் சில நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் அதே வேளையில், நாய் கடித்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு முறையான கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்களை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தத் துரிதமான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
