சமூக வலைதளங்களில் தினமும் பல வினோதமான வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் நம் மனதை பாரமாக்கிச் சிந்திக்க வைக்கின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ மனிதநேயம் குறித்த பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. ஒரு பேருந்துக்குள் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ள நிலையில், பல இளைஞர்கள் நின்று கொண்டு பயணம் செய்கின்றனர். ஆனால், அங்கிருந்த ஒரு முதியவருக்கு அமர இடம் கிடைக்காததால், அவர் வேறு வழியின்றி பேருந்தின் அழுக்கான தரையிலேயே அமர்ந்து பயணம் செய்கிறார்.

அவரைச் சுற்றிப் பல ஆரோக்கியமான இளைஞர்கள் அமர்ந்திருந்தும், ஒருவர்கூட எழுந்து அந்த முதியவருக்கு இடம் கொடுக்க முன்வரவில்லை.

இந்தச் சங்கடமான காட்சியை அங்கிருந்த ஒரு பயணி வீடியோ எடுத்துப் பகிர, அது இப்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அடிப்படை பண்புகூட மறைந்து வருகிறதோ?” எனப் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இடம் மற்றும் காலம் தெரியாத இந்த வீடியோ, இன்றைய தலைமுறையினரிடம் மறைந்து வரும் இரக்க குணத்தைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.