தாய்லாந்தில் காணாமல் போன வளர்ப்பு நாய் ஒன்று, இரண்டு வாரங்களுக்குப் பிறகு தற்செயலாகத் தனது உரிமையாளரைச் சந்தித்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது நாயைத் தேடி அலைந்து ஓய்ந்து போன அந்த நபர், ஒரு நாள் தாகத்திற்காக ஒரு குளிர்பானக் கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு ஓடி வந்த ஒரு வெள்ளை நிற நாய், அவரை மோப்பம் பிடித்துவிட்டு உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது. முதலில் திகைத்துப் போன அந்த நபர், அது தனது காணாமல் போன வததார்ந்த நாய் என்பதை உணர்ந்ததும் ஆனந்தக் கண்ணீருடன் அதைத் தழுவிக் கொண்டார்.

இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பார்ப்பவர்களைக் கண் கலங்கச் செய்துள்ளது. “என்னைப் பிரிந்து ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டான், தினமும் வாசலிலேயே எனக்காகக் காத்திருப்பான்” என்று அந்த நபர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

“>

 

ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு மத்தியிலும் தனது உரிமையாளரின் வாசனையை வைத்து அந்த நாய் அடையாளம் கண்டுகொண்டது தான் உண்மையான விசுவாசம் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.