தாயின் பாசத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு நாய் தனது குட்டியைப் பாதுகாக்க உயிரையும் துச்சமென மதித்துப் போராடும் வீடியோ இணையத்தில் பலரையும் கலங்க வைத்துள்ளது.
பிஸியான ஒரு சாலையில், அந்த நாயின் குட்டி பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தது. வாகனங்கள் அதிவேகமாக வந்து கொண்டிருந்த நிலையில், தனது குட்டி மீது ஏதேனும் வண்டி ஏறிவிடுமோ என்று பயந்த அந்த தாய் நாய், குட்டியின் முன்னே ஒரு கேடயம் போல நின்றது.
On a busy Indian road, a fearless mother dog stood against speeding vehicles, risking everything to save her injured puppy 🥹 pic.twitter.com/gkT1LO4kXH
— Vishal (@VishalMalvi_) February 24, 2026
வாகனங்கள் வரும்போதெல்லாம் நகராமல் அங்கேயே நின்று கொண்டு, வண்டிகளைத் தனது பாதையை மாற்றும்படி கட்டாயப்படுத்தியது. ஒரு கட்டத்தில் ஒரு பெரிய எஸ்யூவி (SUV) கார் மிக அருகில் வந்தபோது, அதன் டயரை கடிக்கப் பாய்ந்து எச்சரிக்கை விடுத்த அந்த தாயின் வீரம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.
இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அனைவரும் அந்தத் தாயின் பாசத்திற்கு மதிப்பளித்து, மெதுவாகத் தங்களது பாதையை மாற்றிச் சென்றனர். “அம்மாவுக்கு மிஞ்சிய வீரன் யாரும் இல்லை” என்ற கருத்துடன் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல லட்சம் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
