பஞ்சாப் சட்டக் கல்லூரியில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர், தனது சக மாணவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, பின் அதே துப்பாக்கியால் தன்னையும் மாய்த்துக்கொண்டார்.
மேலும் கல்லூரியின் வளாகத்திலேயே நடந்த இந்த கொடூரச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கல்வி கற்கும் இடத்தில் நிகழ்ந்த இந்த வன்முறை, மாணவர்களிடையே நிலவும் மன அழுத்தம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Really Disturbing..A young man shot dead a student of Law College in Usma village of Tarn Taran and then committed suicide by shooting himself, Women has been identified as Sandeep Kaur, and the man as Prince Raj, a resident of Mallian village in Tarn Taran. pic.twitter.com/6Ujwk32mnd
— Garima Srivastav (@JournoGarima) February 9, 2026
“>
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் அல்லது ஒருதலைக்காதல் காரணமாக இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், கல்லூரி வளாகங்களுக்குள் ஆயுதங்கள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து நிர்வாகத்திடம் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் இந்த எதிர்பாராத இழப்பால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
