சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு நபர் ஆக்ரோஷமான முதலை ஒன்றின் மீது ஏறி உட்கார முயற்சிக்கும் காட்சிகள் காண்போரை அதிரவைத்துள்ளன. ‘கடலின் சக்கரவர்த்தி’ என்று அழைக்கப்படும் அந்த பிரம்மாண்ட முதலை, அமைதியாக இருப்பதைப் போலத் தோன்றினாலும், அந்த நபர் அதன் அருகில் சென்றவுடன் மின்னல் வேகத்தில் தனது விஸ்வரூபத்தைக் காட்டியது.
மேலும் அந்த நபர் முதலையின் முதுகுப் பகுதியைத் தொட முயன்றபோது, அது திடீரெனத் திரும்பித் தாக்க முற்பட்ட விதம் அங்கிருந்தவர்களை உறைய வைத்தது. இந்தக் காணொளியைக் காணும்போது சாகசம் என்ற பெயரில் வனவிலங்குகளுடன் விளையாடுவது எவ்வளவு ஆபத்தானது என்பது நமக்குப் புரிகிறது.
View this post on Instagram
“>
இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக அந்த நபர் முதலையின் பிடியில் இருந்து மயிரிழையில் தப்பினார். “இயற்கையின் விதிகளை மீறினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்” என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருவதுடன், வனவிலங்குகளிடம் தகுந்த இடைவெளியைப் பேண வேண்டும் என்ற எச்சரிக்கையையும் நமக்குத் தருகிறது.
