சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகத் தனது பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகளை இறைச்சிக்காகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு, முதியவர் ஒருவர் விடுத்த உருக்கமான வேண்டுகோள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சீனப் பாரம்பரியத்தின்படி புத்தாண்டு சமயத்தில் இறைச்சி விருந்து முக்கியப் பங்கு வகிக்கிறது.
அந்த வகையில், தனது கிராமத்துப் பாரம்பரியம் சிதைந்துவிடக் கூடாது என்பதற்காகவும், தனது உழைப்பில் வளர்ந்த விலங்குகளை ஊர் மக்கள் அனைவரும் பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற நோக்கிலும் அவர் வெளியிட்ட வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றது.
View this post on Instagram
“>
இந்த நெகிழ்ச்சியான அழைப்பை ஏற்று, ஆயிரக்கணக்கான மக்கள் அந்தச் சிறிய கிராமத்தில் குவிந்தனர். நவீன உலகில் மறைந்து வரும் கிராமியப் பண்பாட்டையும், சமூகமாக ஒன்றிணைந்து கொண்டாடும் முறையையும் இந்த நிகழ்வு பிரதிபலிப்பதாகப் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த முதியவரின் இந்தச் செயல், பாரம்பரியத்தின் மீதான பிணைப்பை வலுப்படுத்தியது மட்டுமின்றி, இதனால் அந்த கிராமத்தையே ஒரு திருவிழாக் கோலமாக மாற்றியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
