சமூக ஊடகங்களில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து விபரீதச் செயல்களில் ஈடுபடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது

X தளத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், தரையில் சுருண்டு கிடக்கும் ஒரு பாம்பின் தலையில் உள்ள செதில்களை ஒரு நபர் மிகவும் நிதானமாக ஜடை பின்னுவது போலக் கட்டுகிறார்.

சிறிதும் அச்சமின்றி அந்தப் பாம்பின் மிக அருகாமையில் அமர்ந்திருக்கும் அவர், ஒரு கட்டத்தில் தனது கன்னத்தை பாம்பின் வாயின் மீது வைத்து அழுத்துகிறார். அந்தப் பாம்பு எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக இருப்பது காண்போரைக் குழப்பத்திலும், பீதியிலும் ஆழ்த்தியுள்ளது.
<a href=”http://

“>
இந்த அதிர்ச்சியூட்டும் 12 விநாடி வீடியோ, @AMAZlNGNATURE என்ற எக்ஸ் தளப் பக்கத்தில் பகிரப்பட்டு, லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. “இது தைரியம் அல்ல, வெறும் அதிர்ஷ்டம்” என்றும், “வெறும் லைக்குகளுக்காகவும், உள்ளடக்கத்திற்காகவும் இவ்வளவு ஆபத்தான காரியத்தைச் செய்வதா?” என்றும் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

உலகில் உள்ள பெரும்பாலான பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை என்பதால், இத்தகைய செயல்கள் எப்போது வேண்டுமானாலும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என வனவிலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். சமூக வலைதளப் புகழுக்காகத் தற்கொலைக்குச் சமமான இத்தகைய செயல்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.