விலங்குகளை மையமாகக் கொண்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அவற்றில் சில நகைச்சுவையால் கவனம் ஈர்க்கும் நிலையில், சில காணொளிகள் பார்ப்பவர்களின் மனதை மகிழ்விக்கின்றன. அந்த வகையில், தற்போது ஒரு குறும்புக் குரங்குக்கும் ஒராங்குட்டானுக்கும் இடையிலான வேடிக்கையான காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சுமார் 10 வினாடிகள் மட்டுமே நீளமான இந்த காணொளியில், ஒரு மரப் பாலம் அல்லது மேடையில் அமர்ந்திருக்கும் ஒராங்குட்டான் அமைதியாக உணவு உண்டுகொண்டிருப்பது காட்சியளிக்கிறது. அச்சமயம், அங்கு வந்து சேரும் ஒரு சிறிய குரங்கு, ஒராங்குட்டானை நெருங்கி அதன் அருகில் சுற்றுகிறது. ஆரம்பத்தில் அது என்ன செய்யப்போகிறது என்பதை ஒராங்குட்டான் புரிந்துகொள்ளாத நிலையில், குரங்கு திடீரென அதன் வாயில் இருந்து உணவைப் பறிக்க முயல்கிறது.
இதனால் சற்று அதிர்ச்சியடைந்த ஒராங்குட்டான், ஓட முயற்சிக்கும் அந்தக் குரங்கினை விரைவாகப் பிடிக்கிறது. அந்த தருணத்திலேயே காணொளி முடிவடைகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியாதபோதிலும், இந்த காட்சி பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளது.
— Wildlife Uncensored (@TheeDarkCircle) December 13, 2025
இந்த நகைச்சுவை நிறைந்த காணொளி, சமூக ஊடக தளமான எக்ஸ் இல் @TheeDarkCircle என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோ, நூற்றுக்கணக்கான லைக்குகளையும் கருத்துகளையும் குவித்துள்ளது. காணொளியை பார்த்த பலரும் தங்களது நகைச்சுவை கருத்துகளை பதிவிட்டுள்ளனர். “இது பள்ளிக் காலத்தில் நண்பர்களிடமிருந்து உணவைப் பிடுங்கும் காட்சியை நினைவூட்டுகிறது” என ஒருவர் கூறியுள்ள நிலையில், “இந்தக் குரங்கு உண்மையிலேயே மிகுந்த குறும்புக்காரன்” என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் குரங்குக்கும் ஒராங்குட்டானுக்கும் இடையிலான இந்த அப்பாவியான நகைச்சுவை தருணம், சமூக ஊடகங்களில் பயனர்களுக்கு சிறிய மகிழ்ச்சியையும் சிரிப்பையும் அளித்து வருகிறது.
