இந்தியாவில் அடையாளம் தெரியாத இடத்தில் எடுக்கப்பட்ட ஒரு அதிர்ச்சி தரும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதன்படி பரபரப்பான சாலையிலேயே 15 வயது சிறுமியை ஒரு நபர் பலமுறை அறைந்த சம்பவம் இதில் பதிவாகியுள்ளது.

சாலையோரத்தில் இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது, அந்நபர் திடீரென சிறுமியை பொதுவெளியில் பலமுறை தாக்கியுள்ளார். அருகில் சென்ற ஒருவரால் இந்த காட்சிகள் மொபைல் போனில் பதிவுசெய்யப்பட்டன.

 

தாக்குதலை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழிப்போக்கர், சம்பவ இடத்திற்கு சென்று, “என்ன நடக்கிறது?” என்று கேட்டு தலையிட முயன்றார். தாக்குதலைத் தடுக்க அவர் அந்த நபருக்கு எச்சரிக்கை அடியாக ஒரு அறை விட்டதும், அதிர்ச்சி நிகழ்ந்தது.

தன்னைத் தாக்கியவரை ஆதரிப்பதற்குப் பதிலாக, சிறுமியும் அந்த ஆணும் ஒருங்கிணைந்து தலையிட்ட வழிப்போக்கரையே எதிர்த்து பழிவாங்க முயன்றனர். கோபமடைந்த அந்த நபர் மீண்டும் முனைந்து வர, சிறுமி அவரைத் தடுக்க முயன்றாலும், உடனே வழிப்போக்கரிடமே, “ஏன் அவரை அடித்தீர்கள்? இது உங்கள் வேலை அல்ல” என்றார்.

“சாலையின் நடுவிலே நடக்கும் தாக்குதல் எப்படி தனிப்பட்ட விஷயமாக கருதப்படும்?” என்று அதிர்ச்சியடைந்த வழிப்போக்கர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலாக, “இது எங்களுக்குள் நடக்கும் விஷயம்” எனவும், “இதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்” எனவும் அந்த ஜோடி வற்புறுத்தியதாக வீடியோவில் கேட்கப்படுகிறது.

சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. சிறுமிகள் மீது நடைபெறும் வன்முறையை சாதாரணமாகக் காண்பது, மேலும் சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தாக்குதல்காரர்களையே காப்பாற்றும் மனநிலை உருவாவதைக் குறித்து பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.