டெல்லி பல்கலைக்கழகத்தின் தேர்வு அறையில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. ஒரு தெருநாய் சாதாரணமாக அறைக்குள் நுழைந்து, மாணவர்களுக்கு ‘மேற்பார்வையாளர்’ போல மேசைகளுக்கு நடுவில் நடந்து சென்றது. தேர்வின் அழுத்தமான சூழலில், இந்த எதிர்பாராத விருந்தாளியைப் பார்த்த மாணவர்கள் சிரித்து மகிழ்ந்தனர். இணையவாசிகள் உடனடியாக அந்த நாய்க்கு ‘டொகேஷ் பாய்’ என்று செல்லப் பெயரிட்டனர். மாணவர்கள் அதை ஒரு தொந்தரவாகப் பார்க்காமல், ஒரு கலகலப்பான இடைவேளையாக எடுத்துக் கொண்டதிலிருந்து, வளாகத்தில் உள்ள விலங்குகளிடம் மாணவர்கள் எவ்வளவு அன்புடன் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
Dosgeswag🥵 pic.twitter.com/L1Epmht2FG
— Ghar Ke Kalesh (@gharkekalesh) November 10, 2025
இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவி, பல மீம்ஸ்களையும், வேடிக்கையான கருத்துகளையும் உருவாக்கியுள்ளது. ‘டொகேஷ் பாய்’க்கு 10/10 மதிப்பெண் போடும் அதிகாரம் இருப்பதாகக் கற்பனையாகப் பேசினர். சிலர், ‘இவர் நிச்சயமாகப் பொலிட்டிக்கல் சயின்ஸ் துறையில் இருந்து வந்த வெளித் தேர்வாளர்’ என்றும் கிண்டல் செய்தனர்.
