தமிழகத்தில் நாமக்கல் – சேலம் சாலையில் கார் ஓட்டிச் சென்ற ஒருவருக்கு ஒரு திகிலூட்டும் அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் ஒருவர் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தபோது, தனது காரின் பக்கவாட்டுக் கண்ணாடியில் ஏதோ அசைவதைக் கண்டுள்ளார்.

அதிர்ச்சியுடன் கவனித்தபோது, அந்தக் கண்ணாடியின் மறைவிலிருந்து ஒரு பாம்பு வெளியே வருவதைக் கண்டுள்ளார். இந்த கோரக் காட்சி வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாம்பைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அந்த ஓட்டுநர், தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உடனடியாகக் காரை நிறுத்திவிட்டு வெளியேறியுள்ளார். இதைக் கண்ட இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும் திகிலுடன் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், அவ்வழியே சென்றவர்கள் வனவிலங்கு மீட்புக் குழுவினருக்குத் தகவல் கொடுத்தனர். மீட்புக் குழுவினர் விரைந்து வந்து, பாம்பைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

குளிர் மற்றும் மழை காலங்களில், பாம்புகள் மற்றும் சிறிய உயிரினங்கள் பெரும்பாலும் வெப்பம் தேடி வாகனங்களுக்குள் தஞ்சமடைவதால், வாகன உரிமையாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.